ADDED : ஜன 13, 2024 05:30 AM
தாடிக்கொம்பு : கோவையில் நடந்த தேசிய இளையோர் எறிபந்து போட்டியில் 21 மாநிலங்களை
சேர்ந்த அணிகள் பங்கேற்றதில், இதன் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி வென்று வெள்ளி பதக்கம் பெற்றது . தமிழ்நாடு அணியில் திண்டுக்கல் தாடிக்கொம்பு ஸ்ரீ குருமுகி வித்தியாஸ்ரம் பள்ளி பிளஸ் 2 மாணவன் பாலாஜி, ஒன்பதாம் வகுப்பு மாணவி சான்ட்ரா நியுசிலியா இடம் பெற்று வெற்றி வாகை சூடினர். இவர்களை தாளாளர் திவ்யா, நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், முதல்வர் சியாமளா பாராட்டினர்.