ADDED : செப் 14, 2025 03:53 AM
சாணார்பட்டி: -சாணார்பட்டியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் ஊர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிவசக்தி 24. சாணார்பட்டி கோயில் திருவிழாக்காக வந்தவர் அப்பகுதி 15 வயது சிறுமியை கடத்தி சென்றார்.
சாணார்பட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சிவசக்தியை கைது செய்தனர்.விசாரணையில், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.