/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை
மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை
மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை
மரங்களால் இயற்கையை காக்கும் கலாம் அறக்கட்டளை

மக்களுக்கு மரக்கன்றுகள்
எஸ்.பிரபா, நிர்வாக இயக்குனர், தனியார் நிறுவனம் , கே.அய்யாபட்டி- நத்தம்: சுற்றுச்சூழலை காக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு முக்கியமான நாட்களுக்கும் எங்கள் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறோம்.
மலைக்காடுகள் உருவாக்குகிறோம்
கி.சசிகுமார், தலைவர், கலாம் அறக்கட்டளை, கே.அய்யாபட்டி:அறக்கட்டளை தன்னார்வலர்கள் இணைந்து தண்ணீர் பிரச்னையை முற்றிலும் தீர்ப்பதற்காகவும் இயற்கையே மீட்டெடுப்பதற்காகவும் நீர்நிலைகளில் பனை விதை , பழமை வாய்ந்த மரங்கள் நட்டு மலைக்காடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் , சுய உதவிக் குழுக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இலவச மரக்கன்றுகள் வேண்டும் என்பவர்கள் எங்களது அறக்கட்டளை தொடர்பு கொள்ளலாம்.