Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு

ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு

ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு

ஜாக்டோ- ஜியோ பெருந்திரள் முறையீடு

ADDED : செப் 10, 2025 08:10 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல் : சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ -ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்பீட்டர், முருகன், ராஜாக்கிளி, ஜோசப்சேவியர், முபாரக்அலி, ஜெசி தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட்பால்ராஜ், பேட்ரிக்ரெய்மாண்ட் பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us