ADDED : ஜூன் 08, 2025 03:56 AM
திண்டுக்கல் : வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் ஜூன் 11,12 ல் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம் நடக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் 200க்கு மேற்பட்ட அரங்குகளை அமைத்து அரசு துறைகள், வேளாண், தோட்டக்கலை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை, மீன் வளம், தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மதிப்புக் கூட்டுதல் ,ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என விதைச் சான்றளிப்பு உயர்மசான்றளிப்பு திண்டுக்கல் உதவி இயக்குநர் சின்னசாமி கேட்டுள்ளார்.