Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி

சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி

சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி

சுற்றுச்சுவர் இல்லாத அரசு பள்ளி

ADDED : ஜூன் 30, 2025 02:58 AM


Google News
எரியோடு : எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

வேடசந்தூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே இந்த அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பல கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் முன் பகுதியில் குறிப்பிட்ட துாரத்திற்கும், அலுவலகம் அமைந்துள்ள மேற்கு பகுதியிலும் மட்டும் சில நுாறு மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதிலும் சில பகுதிகள் சரிந்து கீழே விழுந்து கிடக்கின்றன. மற்ற இரு திசைகளிலும் சுற்றுச்சுவர அமைக்கப்படாமல் திறந்த வெளியாக உள்ளது. பள்ளியை சுற்றிலும் ஏராளமான விவசாய நிலங்கள், ஓடை இருப்பதால் விஷப்பூச்சிகள் தடையின்றி எளிதாக வந்து செல்லும் நிலை உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்திற்குள் அனுமதியின்றி பலரும் புகுந்து விடுகின்றனர். இந்த செயலை கண்டித்தால் பள்ளி நிர்வாகத்தினரை அவர்கள் மிரட்டுகின்றனர். பள்ளியில் பாதுகாப்பு கருதி சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துளளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us