ADDED : செப் 02, 2025 04:59 AM
வேடசந்துா : ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலம் போது ஆத்து மேட்டில் வாகனங்கள் நின்ற போது ஒரு வாகனத்தில் ஒலிபெருக்கியில் பாட்டு போட்டுள்ளார்.அதை மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் நிறுத்த கோரினர்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. குடகனாற்றில் சிலையை கரைத்து விட்டு வேடசந்துார் சந்தைப்பேட்டை அருகே வந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்த வேடசந்துார் போலீசார் சரபோஜி, ஜெகன் , கிரண் குமார், கவுதம் ஆகியோரை கைது செய்தனர்.