ADDED : மார் 23, 2025 04:08 AM
திண்டுக்கல் : வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண்மை தொழில்நுட்ப கல்லுாரி 4 ம் ஆண்டு மாணவர்கள் இம்ரான், காளிமுத்து, கலையரசன், கமலேஷ், ஜனார்தனன்குமார், கவியரசு, லிங்கேஸ்வரன், கிேஷார் ,மணிகண்டன் ஆகியோர் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளின் பயன்பாடு, முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தனர்.
மாணவர்களுக்கு காடுகள் தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரி சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.