ADDED : ஜூன் 15, 2025 06:49 AM

செந்துறை : பெரியூர்பட்டி வ.களத்தில் வடக்குப் பார்த்த மகாகாளியம்மன், வீர மகாமுனி சின்னம்மாள் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்மாலைகள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதேரில் அம்மன் வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. நேற்று இரவு அம்மன் பூஞ்சோலை சென்றது.