ADDED : செப் 04, 2025 04:33 AM
வேடசந்துார்: வேடசந்துார் குடகனாற்று மேம்பாலம் அருகே பொதுக் கழிப்பறை உள்ளது. இதன் அருகே ஏராளமான குப்பை , காய்ந்த கருவேல முட்கள் குவிந்து கிடந்தன.
இதில் நேற்று மாலை 4:00 மணிக்கு பற்றிய தீ கொளுந்து விட்டு எரிய துவங்கியது.
புகை மண்டலமான நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.