ADDED : ஜூன் 12, 2025 02:34 AM
நத்தம்: தாலுகா அலுவலகத்தில் மதுரை அனில்குமார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
தாசில்தார் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். தனி வட்டாட்சியர் விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். மதுரை கண் மருத்துவர் அணில்குமார் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் செய்திருந்தார்.