Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று

ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று

ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று

ரோட்டோரம் கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று

ADDED : ஜூன் 27, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
மின்கம்பத்தில் செடிகள்

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்து புதர் மண்டியுள்ளது .இதனால் விபத்து அபாயம் உள்ளது ,அருகே செல்வோர் பயத்துடன் செல்கின்றனர் ,செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணிவேல், திண்டுக்கல்.

.....---------

ரோட்டில் குவியும் குப்பை

பழநி இடும்பன்மலை அருகே வள்ளியப்பா கார்டன் நுழைவு பகுதியில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பையை கொட்டி குவிப்பதால் அசுத்தமாக உள்ளது .அப்பகுதியில் செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். கார்த்திக், பழநி.

........----------வீணாகும் கழிப்பறை

அய்யலுார் எத்தலப்ப நாயக்கனுாரில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இங்கு தண்ணீர் சப்ளை வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் முன் முன் வர வேண்டும். -- மணி, அய்யலுார்.

..........----------சிரமத்தில் வாகன ஓட்டிகள்

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் ஜல்லிகற்கள் சிதறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். டூவீலரில் வருபவர்கள் சரிக்கி கீழே விழுகின்றனர் .ஜல்லிகற்களை அகற்ற உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வினோத், திண்டுக்கல்.

..............----------விபத்து அபாயத்தில் மரம்

அய்யலுார் மணியகாரன்பட்டி வீடு அருகே புளியமரம் காய்ந்த நிலையில் உள்ளது .இதனால் விபத்து அபாயமும் உள்ளது .இதன் அருகே செல்பவர்கள் அச்சத்துடன் உள்ளனர். மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுந்தரம்,மணியகாரண்பட்டி.

,................----------கழிவால் சுகாதாரக்கேடு

வேடசந்துார் கரூர் ரோட்டில் ரங்கமலை கண்மாய் அருகே ரோட்டோரம் வாகனங்களில் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவு பொருட்களால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது . இதோடு அப்பகுதியில் தொற்றுக்கு வழி வகுக்கிறது. --எஸ்.சிந்தனை செல்வன், வேடசந்துார்.

...........----------தெருவில் கழிவுநீர் தேக்கம்

திண்டுக்கல் சத்திரம் தெருவில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி ரோட்டோரத்தில் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. கழிவு நீர் தேங்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பழனிச்சாமி, திண்டுக்கல்.

..........-----------





      Our Apps Available On




      Dinamalar

      Follow us