ADDED : ஜூலை 02, 2025 06:55 AM
நத்தம் : நத்தம் அரசு மண்டபத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. பி.டி.ஓ., முருகேஸ்வரி தலைமை வகித்தார்.
தாசில்தார் ஆறுமுகம்,முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், சேக் சிக்கந்தர்பாட்சா, பழனிசாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடபதி வரவேற்றார். ஆர்.டி.ஓ., சக்திவேல் மனுக்களை பெற்றார். 500-க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.