Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

ADDED : ஜன 29, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா முடிந்த நிலையில் இன்னும் பக்தர்கள் வருகை அதிக அளவில் உள்ளது. வரும் பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து அழகு குத்தி, கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வின்ச், ரோப்கார் மூலம் முருகன் கோயில் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர்.

ரோப் கார் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு முறையான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் சிரமம் அடைந்தனர். பொது தரிசன வழி,கட்டண தரிசன வழிகளில் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us