பழநி : தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முறையீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது தொழிலாளர்களை வேலை இல்லை என புறக்கணிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநி தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் லாசர், ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, பழனிச்சாமி பங்கேற்றனர்.