Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பாசிபடர்ந்த தெப்பகுளத்தால் காத்திருக்கு ஆபத்து

பாசிபடர்ந்த தெப்பகுளத்தால் காத்திருக்கு ஆபத்து

பாசிபடர்ந்த தெப்பகுளத்தால் காத்திருக்கு ஆபத்து

பாசிபடர்ந்த தெப்பகுளத்தால் காத்திருக்கு ஆபத்து

ADDED : ஜன 08, 2024 05:47 AM


Google News
திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் உள்ள முனியப்பன்சுவாமி குளம் பல மாதங்களாக துார்வாராமல் பாசி படர்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நகரில் உள்ள கழிவுநீர் இக்குளத்தில் தேங்கி மக்களை பாடாய்படுத்துகிறது. மொத்த கொசுக்களின் கூடாரமாகவும் இக்குளம் விளங்குகிறது. தடுப்பு வேலி இல்லாமலிருப்பதால் மக்கள் இக்குளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. தொடரும் இப்பிரச்னைக்கு மாநகராட்சி அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

.............

துார்வார நடவடிக்கை

சிலுவத்துார் ரோட்டில் உள்ள முனியப்பன் குளத்தை ஆய்வு செய்து துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்புக்காக சுற்றிலும் வேலிகள் அமைக்கப்படும்.

-சுப்பிரமணியன்,மாநகராட்சி செயற்பொறியாளர்,திண்டுக்கல்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us