ADDED : மார் 17, 2025 05:49 AM

பழநி,: பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் வந்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் காத்திருந்தனர்.
கிரிவீதியில் வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் அவதிப்பட்டனர். கோயில் வெளிப்பிரகாரத்தில் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த தரை விரிப்பு அமைத்து தண்ணீர் தெளிக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால், பேட்டரி கார் மற்றும் பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.