ADDED : மே 19, 2025 04:48 AM

பழநி :பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.
பழநி கோயிலுக்கு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் பள்ளி தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகை புரிந்தனர். அதே நேரத்தில் நேற்று தேய்பிறை சஷ்டி என்பதால் வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
ரோப்கார், வின்ச், பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.