ADDED : செப் 14, 2025 03:48 AM
நத்தம்:நடுவனுாரை சேர்ந்தவர் சேக்மைதீன் 46. அண்ணாநகரை சேர்ந்த இவரது உறவினர் ஜாகீர்உசேன் 40. இருவருக்கும் முன்விரோதம் உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இவர்களது உறவினர் பரிதா இறந்தார். துக்கம் விசாரிக்க சென்ற போது இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. நத்தம் எஸ். ஐ., அருண்நாராயணன் அண்ணாநகரை சேர்ந்த பீர்முகமது 20, டேனியல் 20, பிரவீன் 19, அபுபக்கர்சித்திக் 20, ஆகிய 4 பேரை கைது செய்தார்.