ADDED : அக் 06, 2025 05:55 AM
வேடசந்தூர் திண்டுக்கல் ஏ.வெள்ளோடு அண்ணாமலையார் மில் காலனியைச் சேர்ந்தவர் ஜெரால்ட் பிரிட்டோ 49.
தாடிக்கொம்பு பேரூராட்சியில் பணி மேற்பார்வையாளராக (ஓவர்சீர்) பணிபுரிந்து வந்தார். மாரம்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு டூவீலரில் சென்றவர் மீண்டும், திண்டுக்கல் நோக்கி திரும்பியபோது, மாரம்பாடி திருகம்பட்டி பிரிவு அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


