/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி
ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி
ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி
ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி

கண்காணிப்பு தேவை
குருசாமி, முன்னாள் ராணுவ வீரர், சின்னாளபட்டி: கனரக, டூவீலர்கள் என எந் நேரமும் கணிசமான அளவில் இத்தடத்தில் போக்குவரத்து இருக்கும் இங்கு , ரோடு விரிவாக்கம் பணிக்காக ரோட்டின் இருபுறமும் குழிகள் தோண்டி பல மாதங்களாகிறது. இதனால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் முன்பு வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி இல்லை. போலீஸ், நெடுஞ்சாலை துறையின் கண்காணிப்பு இல்லாததால் பொதுமக்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.
--நெரிசலில் சிக்கி தவிப்பு
வைரமுத்து,த.வெ.க., தொண்டரணி நிர்வாகி, சின்னாளபட்டி : பெரும்பாலான கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. ரோடு விரிவாக்கம் செய்தும் பயனில்லாத சூழல் நிலவுகிறது. டூவீலர் மட்டுமின்றி கனரக வாகனங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அடிக்கடி நெரிசல் வாடிக்கையாகிவிட்டது. வணிகர்கள், சரக்கு வாகனங்கள் செல்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. முதியோர், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள், பெண்கள் இப்பகுதியில் நடமாடுவதில், கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் இது போன்ற நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகும் அவல நிலை பல மாதங்களாக தொடர்கிறது.