ADDED : பிப் 11, 2024 01:15 AM
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
நேற்று மேற்கு கிரிவீதியில் பெண் பக்தர் ஒருவரிடம் 35 வயது நபர் சீண்டலில் ஈடுபட்டார். அவரை பொதுமக்கள் பிடித்து அடித்தனர். போலீசாரோ வாலிபருக்கு தக்க அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.