Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஒட்டன்சத்திரத்தில் மாட்டுச்சந்தை

ஒட்டன்சத்திரத்தில் மாட்டுச்சந்தை

ஒட்டன்சத்திரத்தில் மாட்டுச்சந்தை

ஒட்டன்சத்திரத்தில் மாட்டுச்சந்தை

ADDED : ஜன 08, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம் : பொங்கலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ரூ.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒட்டன்சத்திரம் நகராட்சி மாட்டுச்சந்தை வாரந்தோறும் ஞாயிறு மாலை தொடங்கி இரவு வரை நடக்கிறது.

திண்டுக்கல், பொள்ளாச்சி, மணப்பாறை, காங்கேயம் பகுதிகளில் இருந்து கறவை மாடுகள், கன்றுகுட்டிகள், அடிமாடுகள் என இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாடுகள் விற்பனைக்கு வந்தது. பசுமாட்டின் கன்று குட்டிகளை வளர்ப்புக்காக விவசாயிகள் அதிகமாக வாங்கி சென்றனர். கன்று குட்டிகள் ரூ.55 ஆயிரம் வரை விற்பனையானது. அடி மாடுகளை கேரள வியாபாரிகள் இறைச்சிக்காக வாங்கினர். விவசாயிகள், வியாபாரிகள் அதிகமான மாடுகளை வாங்க ஆர்வம் காட்டியதால் மாடுகள் விலை அதிகரித்து காணப்பட்டது. ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனையானதாக வியாபரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us