Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

ADDED : ஜூன் 23, 2025 09:45 AM


Google News
Latest Tamil News
நத்தம் : நத்தம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து திருப்பரங்குன்றத்திற்கு நத்தம் வழியாக மதுரை- துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை நெல்லூரை சேர்ந்த பிரசாத் 27 என்பவர் ஓட்டி சென்றார். நத்தம் அருகே வீமாஸ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. காரின் முன்பக்கம் நொறுங்கியது. விபத்தில் கார் ஓட்டிய பிரசாத், நெல்லூரை சேர்ந்த ஜனார்த்தன் 43. சீனிவாசன் 47, வெங்கடேஷ் 49 ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 4 பேரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us