/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்
தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்
தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்
தங்கம்மாபட்டியை புறக்கணிக்கும் பஸ்கள்;பரிதவிப்பில் எல்லை கிராம மக்கள்

-மக்கள் சிரமப்படுகின்றனர்
வி.கவுரிபாலம்மாள், குடும்பத்தலைவி, தங்கம்மாபட்டி: அய்யலுார் பேரூராட்சியிலும், புதுவாடி ஊராட்சியிலும் தலா ஒரு வார்டு தங்கம்மாபட்டி என்ற பெயரிலேயே உள்ளது. தங்கம்மாபட்டி என்ற பெயரில் 1991 வரை ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு இப்பகுதியினர் திருச்சி, திண்டுக்கல்லிற்கு சென்றனர்.
தனியார் பஸ்களும் குறைவு
எஸ்.ஆனந்தஜோதி, வியாபாரி, தங்கம்மாபட்டி: பல வழித்தடங்களிலும் அரசு பஸ்களை காட்டிலும் தனியார் பஸ்கள் நடுத்தர கிராமங்களை புறகணிப்பு செய்யாமல் ஏற்றி இறக்கி செல்கின்றன .
-நடவடிக்கை எடுக்க வேண்டும்
கே.காளித்தாய், வியாபாரி, தங்கம்மாபட்டி: தங்கம்மாபட்டி முடக்குபட்டிக்கு அடுத்து திருச்சி மாவட்டப்பகுதிக்குள் தங்கம்மாபட்டி புதுார் உள்ளது. இப்பகுதியினரும் பஸ் வசதிக்கு தங்கம்மாபட்டிக்கே வர வேண்டியுள்ளது. இங்கிருந்தே திருச்சி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலம், மணப்பாறை, வேடசந்துார் தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். விவசாய அலுவலக பணிகளுக்கு வையம்பட்டி, வடமதுரை செல்ல வேண்டும். இதுவரை இப்பகுதி கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்கு தங்கம்மாபட்டி பஸ்ஸ்டாப் வழியே வரும் பஸ்கள் மூலமே செல்ல வேண்டும். எல்லையில் இருப்பதால் டவுன் பஸ்கள் குறைவாக உள்ளன. எனவே குறைந்த துார சேவையாக இயக்கப்படும் விரைவு பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முயற்சி எடுக்கப்படும்
ஓ.பாண்டீஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர், அய்யலுார்: பல ஆண்டுகளுக்கு முன் வரை மணப்பாறையிலிருந்து அய்யலுார் வரை 6 டிரிப் இயக்கப்பட்ட டவுன் பஸ் சேவை தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் வேடசந்துாரிலிருந்து வடமதுரை வரை ஒரு டவுன் பஸ்சை இயக்கி, பின்னர் அதை வையம்பட்டி வரை சென்று வரும்படி செய்தால் வடமதுரை வேடசந்துார் இடையேயும், இரு மாவட்டங்களிலும் எல்லையோர கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன் பெறுவர் .