ADDED : மே 26, 2025 02:41 AM

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் போகர் சன்னதியில் ஜெயந்தி விழா நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனை போகர் சித்தர் உருவாக்கியுள்ளார். இவருடைய ஜீவசமாதி பழநி கோயிலில் உள்ளது. நேற்று போகர் சித்தரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உச்சி கால வேளையில் புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கம் ஆகியவற்றிற்கு 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. பின் அலங்காரம், தீபாராதனை நடந்தது. வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.