Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

ADDED : அக் 03, 2025 01:15 AM


Google News
கள்ளிமந்தையம்; தேசிய ரத்ததான தினத்தை முன்னிட்டு கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் ரத்ததான விழிப்புணர்வு கருத்தரங்கம், வினாடி வினா போட்டி நடந்தது. நாட்டு நலப்பணி திட்ட மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் தலைமை வகித்தார்.

காந்திகிராமம் தம்பி தோட்டம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மயில்சாமி வரவேற்றார். இந்திய மருத்துவ கழகம் ஒட்டன்சத்திரம் கிளைத்தலைவர் ஆசைத்தம்பி ரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்து விளக்கினார். வினாடி வினா போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.அருள்நெறி பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us