Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ துணை பேராசிரியர் விபத்தில் பலி

துணை பேராசிரியர் விபத்தில் பலி

துணை பேராசிரியர் விபத்தில் பலி

துணை பேராசிரியர் விபத்தில் பலி

ADDED : ஜூலை 05, 2025 03:06 AM


Google News
வேடசந்துார்: விட்டல்நாயக்கன்பட்டி அருகே சுற்றுலா வேன் மோதியதில் தனியார் கல்லுாரி துணைப்பேராசிரியர் பலியானார்.

காந்திஜி நகரில் வசிப்பவர் அய்யலுார் தனியார் கல்லுாரி துணை பேராசிரியர் அஜித்குமார் 24. டூவீலரில் வேடசந்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் அதிகாலை 12:30 மணிக்கு திண்டுக்கல் நோக்கி சென்றார். விட்டல்நாயக்கன்பட்டி அருகே நான்கு வழி சாலையை குறுக்காக கடக்க முயற்சித்துள்ளார். அப்போது திருநெல்வேலி செல்வன் ஒட்டி வந்த சுற்றுலா வேன் மோதியதில் அஜித்குமார் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us