Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுவாமி சன்னதிக்கு இணையாக அலுவலர்கள் அறை குறைதீர் கூட்டத்தில் முறையீடு 

சுவாமி சன்னதிக்கு இணையாக அலுவலர்கள் அறை குறைதீர் கூட்டத்தில் முறையீடு 

சுவாமி சன்னதிக்கு இணையாக அலுவலர்கள் அறை குறைதீர் கூட்டத்தில் முறையீடு 

சுவாமி சன்னதிக்கு இணையாக அலுவலர்கள் அறை குறைதீர் கூட்டத்தில் முறையீடு 

ADDED : செப் 09, 2025 04:31 AM


Google News
திண்டுக்கல்: சுவாமி சன்னதிக்கு இணையாக அலுவலர்கள் அறை, கோயில் முறைகேட்டை விசாரிக்க அடிப்படை வசதிகளை செய்து கொடுங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலரும் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.

கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் 200 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் அளித்து மனுவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோயிலில் விநாயகர், மகாலட்சுமி சன்னதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம், அறங்காவலர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அறைநிலையத்துறை அதிகாரிகள் தெய்வ நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் அறைகள் அமைத்துள்ளனர். தெய்வத்திற்கு இணையாக செயல் அலுவலரும், அறங்காவலர் குழுவினரும் அமர்ந்து பணியாற்றுவது அநியாயம். இதனை காலிசெய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த பால்ராஜ் ஊர்மக்கள் சார்பாக அளித்த மனுவில், 'கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ள செங்கமல வள்ளி தாயார் சமேத கதிர் நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் முறைகேடு நடந்துள்ளது.

கோயில் பெயரில் சட்ட விரோதமாக வசூலித்தது, பழமையான கோயில் துாண்கள் கற்களை மண்ணில் புதைத்த செயல் என பல்வேறு தவறுகள் நடந்துள்ளது.

கோயில் செயல் அலுவலர், அறங்காவலர், பட்டாசாரியார் என அனைவரிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குஜிலியம்பாறை வெள்ளைப்பாறையை சேர்ந்த மதுரைவீரன் 42, பெட்ரோலுடன் கலெக்டர் அலுவலம் வந்தார்.

அவரை பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். மதுரை வீரன் கூறுகையில்,'' 5 ஆண்டுகளுக்கு முன்பு காங்., பிரமுகர் ஒருவரும் வையம்பட்டியை சேர்ந்த ஒருவரும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அசல் சான்றிதழ்களை பெற்றனர். தொடர்ந்து ரூ.10 லட்சம் கேட்டனர், அதற்கு பதிலாக 2.5 ஏக்கர் நிலப்பத்திரத்தை கொடுத்தேன். ஏமாற்றி விட்டனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us