ADDED : ஜூலை 05, 2025 03:04 AM

நத்தம்: குட்டூரில் அண்ணாமலையார் கோயில் நடராஜர் சன்னதியில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதையொட்டி நடராஜருக்கு செண்பகபூ, தாமரை வில்வ மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்ய பால்,பழம், இளநீர், திருமஞ்சனம், தேன், சந்தனம் உள்ளிட்ட 32 வகையான அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் நடராஜர் சன்னதியிலும் ஆனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.