ADDED : ஜூன் 24, 2024 04:37 AM
வேடசந்துார் : வேடசந்துார் தாலுகா அய்யலுாரை சேர்ந்தவர் அன்பு சரவணன் 29.
இவர் வேடசந்துார் ஆத்து மேட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை செய்கிறார். நேற்று மாலை 6:00 மணிக்கு பணியை முடித்துவிட்டு அய்யலுார் நோக்கி தனது டூவீலரில் சென்றார். ஸ்ரீராமபுரம் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் அன்பு சரவணன் இறந்தார். எஸ்.ஐ., பாண்டியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.