ADDED : ஜன 03, 2024 06:46 AM
ஒட்டன்சத்திரம்: பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் -பழநி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இவர்களுக்கு வசதியாக ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரயில்வே மேம்பாலத்தில் பேரல்களால் தனி பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.