/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம் துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம்
துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம்
துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம்
துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம்

காமராஜர் காலத்தில் துார்வாரியது
எம் .சுரேஷ்குமார், ம.தி.மு.க., மாணவர் அணி அமைப்பாளர், ஒட்டநாகம்பட்டி: தோட்டத்திற்கு அருகே தான் இந்த குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் தேங்கினால் சுற்று பகுதியில் குடிநீர் பிரச்னை இருக்காது. இந்த குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஊராட்சி , ஒன்றிய நிர்வாகம் சார்பில் துார் வார கூட முடியவில்லை.
புதர்காடாக காட்சி
பி.காளியப்பன், சமூக ஆர்வலர், வேடசந்துார்:இப்பகுதியில் உள்ள இந்த குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகள் , போர்வெல்களுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். தற்போது புதர்காடாக காட்சியளிக்கும் இந்த குளத்தை பொதுப்பணித்துறை நிர்வாகம் முறையாக துார் வாரவேண்டும். அதேபோல் வரத்து வாய்க்காலையும் முறையாக துார்வாரி வரும் மழைக்காலத்திலாவது முறையாக தண்ணீரை தேக்க வேண்டும்.
கரைபோல் நீண்ட பாறை
எஸ்.கண்ணன், விவசாயி, ஒட்டநாகம்பட்டி:இந்த குளத்திற்கு அருகே தான் எங்களது தோட்டம் உள்ளது. இந்த குளம் நிறைந்தால் மூன்று போகமும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகசூல் எடுப்பர். சமீபகாலமாக குளத்தை தூர்வாராததால் புதர் மண்டி முட்புதராக காட்சியளிக்கிறது.