Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள்: அமைச்சர் சக்கரபாணி

கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள்: அமைச்சர் சக்கரபாணி

கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள்: அமைச்சர் சக்கரபாணி

கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் வீடுகள்: அமைச்சர் சக்கரபாணி

ADDED : மே 17, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்: தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி பேசினார்

ஒட்டன்சத்திரத்தில் நடந்த விழாவில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் , தொப்பம்பட்டி ஒன்றியங்களில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான வேலை அனுமதி அட்டைகள், ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் 147 பயனாளிகளுக்கு ரூ 1.27 கோடி மதிப்பீட்டில் வீடுகளை பராமரிப்பதற்கான வேலை அனுமதி உத்தரவுகளை வழங்கியும், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் 134 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1.34 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான செங்கல் மணல் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் 450 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள், கீரனுாரில் 432 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றார்.

கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார், திட்ட இயக்குனர் திலகவதி, பழநி ஆர்.டி.ஓ., கண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, தாசில்தார் சஞ்சய் காந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வடிவேல் முருகன், பிரபுபாண்டியன், வேதா, தாஹீரா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், , பாலு, சுப்பிரமணி, பொன்ராஜ் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us