ADDED : செப் 09, 2025 04:38 AM
திண்டுக்கல்: கொடைக்கானலை சேர்ந்தவர் அருண்குமார் 25. 2024ல் அப்பகுதியைசேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்ததோடு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மகளிர் போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.
அருண்குமாருக்கு 20 ஆண்டு சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.