ADDED : செப் 02, 2025 05:33 AM

வடமதுரை: வடமதுரை அருகே டூ - வீலர், சைக்கிள் மீது கார் அடுத்தடுத்து மோதிய விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை முத்துநகரை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி பழனிசாமி, 52. நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு வடமதுரை மின்வாரிய அலுவலகம் எதிர்புறம், நான்குவழி சாலையில் சைக்கிளில் சென்றார்.
அதே பகுதியில் பிலாத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ், 63, 'ஹெல்மெட்' அணிந்து டூ - வீலரில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் சென்றார்.
திண்டுக்கல் கசவனம்பட்டியை சேர்ந்த நவீன் பாலாஜி, 27, ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக டூ - வீலர், சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில், பழனிசாமி, கனகராஜ் இறந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.