Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கனவு இல்ல திட்டத்தி ல் 10 ஆயிரம் வீடுகள்: அமைச்சர் சக்கரபாணி

கனவு இல்ல திட்டத்தி ல் 10 ஆயிரம் வீடுகள்: அமைச்சர் சக்கரபாணி

கனவு இல்ல திட்டத்தி ல் 10 ஆயிரம் வீடுகள்: அமைச்சர் சக்கரபாணி

கனவு இல்ல திட்டத்தி ல் 10 ஆயிரம் வீடுகள்: அமைச்சர் சக்கரபாணி

ADDED : ஜூன் 19, 2025 03:04 AM


Google News
Latest Tamil News
ஒட்டன்சத்திரம்:''திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக,'' உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வீரலப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, ஓடைப்பட்டி, கே.கீரனுார், கேதையுறம்பு , ஜோகிபட்டி வலையபட்டி ,இடையகோட்டை ஊராட்சிகளில் ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.4.07 கோடி முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்த அவர் பேசியதாவது:

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 2 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில் 2.50 லட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்

திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, பி.டி.ஓ.,காமராஜ் , தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், பாலு கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us