ADDED : ஜூலை 07, 2024 02:59 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் வன் மகோத்சவ் விழாவை முன்னிட்டு மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த மரக்கன்றுகளை தங்கள் கைகளாலேயே நடவு செய்தனர்.
பள்ளி செயலாளர் பட்டாபிராமன் கூறுகையில், இந்தியா முழுவதும் ஜூலை 1 முதல் 10 நாட்கள் வன் மகோத்சவ் திருவிழா அனுசரிக்கப்பட்டு லட்சக்கணக்கான மரங்கள் நடப்படுகிறது என்றார். பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தரம்மாள், பள்ளி முதல்வர் சவும்யா பங்கேற்றனர்.