ADDED : ஜூன் 06, 2024 05:14 AM
திண்டுக்கல், ; மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் கலா பணி நிறைவு பெற்றதை யொட்டி திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பணி நிறைவு விழா நடந்தது. மருத்துவர் வீரமணி தலைமை வகித்தார்.
மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு வரவேற்றார். துணை மருத்துவ கண்காணிப்பாளர் சந்தனகுமார் ,உதவி சித்த, ஆயுர்வேத, ஓமியோபதி, இயற்கை, யோகா மருத்துவ அலுவலர்கள் வாழ்த்தினர். இவர் மருத்துவ துறையின் உயரிய விருதான பி.சி.ராய் விருது பெற்றுள்ளார். மருத்துவர் கலா கலெக்டர் பூங்கொடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இவரை தொடர்ந்து மாவட்ட சித்தா மருத்துவ புதிய அலுவலராக அமுதா பொறுப்பேற்றார்.