/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நோய் பரப்பும் கேந்திரமாக மாறும் பாதாள சாக்கடை கழிவுநீர் நோய் பரப்பும் கேந்திரமாக மாறும் பாதாள சாக்கடை கழிவுநீர்
நோய் பரப்பும் கேந்திரமாக மாறும் பாதாள சாக்கடை கழிவுநீர்
நோய் பரப்பும் கேந்திரமாக மாறும் பாதாள சாக்கடை கழிவுநீர்
நோய் பரப்பும் கேந்திரமாக மாறும் பாதாள சாக்கடை கழிவுநீர்
ADDED : ஜூன் 04, 2024 06:17 AM

திண்டுக்கல் மருதாணிக்குளம் அங்கன்வாடி மையம் அருகில் பாதாளசாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இவ்வழியில் கடந்து செல்வோருக்கு தொற்று பரம் அபாயம் உள்ளது. இதோடு இதன் கழிவுநீரில் கொசு உற்பத்தியும் ஜோராக நடப்பதால் டெங்கு பரவும் வாய்ப்பும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு பாதாளசாக்கடை கழிவுநீர் வெளியில் வராமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.......
நடவடிக்கை எடுக்கப்படும்
திண்டுக்கல் மருதாணிக்குளம் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோலிலிருந்து கழிவுநீர் வெளியில் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்: