ADDED : ஆக 02, 2024 06:33 AM
ஒட்டன்சத்திரம் : சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் கேதையுறும்பில் மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சித் தலைவர் ஆனந்தகுமாரி ,நுண்ணுயிரியல் துறை மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தேன்மொழி பேசினார். நுண்ணுயிரியல் துறை தலைவர் சிவகாமி, உதவி பேராசிரியர் சிவரஞ்சனி ஒருங்கிணைப்பு செய்தனர்.