/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய பழநி கோயில் நிலங்கள் மீட்பு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய பழநி கோயில் நிலங்கள் மீட்பு
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய பழநி கோயில் நிலங்கள் மீட்பு
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய பழநி கோயில் நிலங்கள் மீட்பு
ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய பழநி கோயில் நிலங்கள் மீட்பு
ADDED : ஜூன் 02, 2024 11:26 PM

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கிரி வீதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு தனியார் வாகன பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. 3 மாதமாக கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உத்தரவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் துரிதமாக கோயில் நிர்வாகம் செயல்படுகிறது.
பாலசமுத்திரம், அய்யம்பள்ளி விநாயகர் கோயில் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பகுதிகளை சீர் செய்து கும்பாபிஷேகம் மே 3ல் நடந்தது. பழநி பாளையம் பகுதியில் விநாயகர் கோயில் முன் இருந்த நான்கு கோயில் கடைகளை இடித்து அப்புறப்படுத்தி மே 3ல் கும்பாபிஷேகம் நடந்தது. பழநி பெரிய கடை வீதியில் உள்ள வேணு கோபால சுவாமி கோயிலில் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தி கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது.
இதேபோல் வடக்கு கிரி வீதி,சவுராஷ்ட்ரா மடம் எதிரிலிருந்த ஆக்கிரமிப்புகள், ஈரோடு மடம், தெற்கு கிரி வீதியில் சாது சாமிகள் மடம்,மேற்கு வீதி, ஹரிசன சேவா சங்கம்,தெற்கு கிரி வீதி பழைய நாதஸ்வர பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு அப்பகுதி புதிப்பொலிவுடன் காணப்படுகிறது.
பாத விநாயகர் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் அருகிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது. கிழக்கு கிரி வீதி, அழகு நாச்சியம்மன் கோயில் முன்புறம் உள்ள சுற்றுலா பஸ் ஸ்டாண்டிற்கு அருகே குப்பை கொட்டப்பட்டு பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்த பகுதியில் குப்பைகொட்டாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.