ADDED : ஜூலை 31, 2024 06:18 AM
வாலிபர் தற்கொலை
திண்டுக்கல்: ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்28. மன உளைச்சலில் வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
லாட்டரி விற்றவர் கைது
திண்டுக்கல்: கக்கன்நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்43. ஏ.எம்.சி.,ரோட்டில் லாட்டரி விற்ற இவரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
தாக்கிய இருவர் கைது
வடமதுரை : வேல்வார்கோட்டை பழைய களராம்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி பொன்னுச்சாமி 24. அதே பகுதி ராஜேந்திரன் 23, கார்த்திக் 30 ,ஆகியோர் தொழில் போட்டியில் பொன்னுச்சாமியை இரும்பு கம்பியால் தாக்கினர். காயமடைந்த பொன்னுச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிய ராஜேந்திரன், கார்த்தி கைது செய்தார்.