Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோட்டில் செல்லும் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்...

ரோட்டில் செல்லும் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்...

ரோட்டில் செல்லும் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்...

ரோட்டில் செல்லும் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்...

ADDED : ஜூன் 21, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் கழிவுநீர்

திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஸ்வநாதன், திண்டுக்கல்.---.......

விரிசலான ரோடுகள்

அய்யலுார் எரியோடு ரோட்டில் சித்துவார்பட்டி பகுதியில் புதிதாக அகலமாக்கப்பட்ட ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழித்தடங்களில் செல்லும் மக்கள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகள் ரோடை சீரமைக்க வேண்டும். - ஜமால் முகமது அய்யலுார்.----........

நடுரோட்டில் மின்கம்பம்

திண்டுக்கல் ரேணுகாதேவி அம்மன் கோயில் தெருவில் நடுரோட்டில் மின்கம்பம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்திக்கின்றனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்குமார், திண்டுக்கல்.------..........

மக்களை அச்சுறுத்தும் விளம்பர பலகை

நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலை எர்மநாயக்கன்பட்டி பகுதியில் பெரியளவிலான விளம்பர பலகை சேதமான நிலையில் உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எந்நேரமும் அச்சத்துடனே பயணிக்கும் நிலை தொடர்கிறது. சேதமான விளம்பர பலகையை அகற்ற வேண்டும். நிஷாந்த்,கே.அய்யாபட்டி.-------..........

--------.........

துார்வாராத கால்வாயால் பாதிப்பு

திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரோட்டில் சாக்கடை கால்வாயில் குப்பை பிளாஸ்டிக் கழிவு அடைத்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது. கால்வாயை துார்வார வேண்டும். வசந்தகுமார், திண்டுக்கல்.---------........

குப்பையால் உருவாகும் சீர்கேடு

திண்டுக்கல் சீலப்பாடி கணேஷ் நகர் கோதாவரி தெருவில் குப்பையை அகற்றாமல் அடிக்கடி தீவைத்து எரிக்கின்றனர். இதனால் கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவுகிறது. குப்பையை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தா.சுரேஷ்குமார் கணேஷ்நகர்.---------

.............................................................





      Our Apps Available On




      Dinamalar

      Follow us