/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள் எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள்
எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள்
எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள்
எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள்

அவசியம் கேமரா
சரவணன்,விவசாயி, லட்சுமிபுரம்: லட்சுமிபுரம் பகுதியில் சாக்கடை இல்லாமல் சுகாதாரக் கேடு உள்ளது. சாலைகள் முறையாக இல்லாமல் மக்கள் பாதிக்கின்றனர். வார்டு பகுதிக்குள் விரைவாக சாக்கடை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிகா பைப் திட்டத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவும் பொருத்த வேண்டும்.
பூங்காவை சரி செய்யுங்க
மங்கையர்க்கரசி, குடும்பத் தலைவி, ராஜா நகர் : மது அருந்தி சாலையில் மது பாட்டில்களை உடைத்து செல்லும் நபர்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். பூங்காவை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளது.இரவு எட்டு மணிக்கு மேல் வீதிகளில் நடமாட முடியாத சூழல் ஏற்படுகிறது. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிக்கலாமே
பாஸ்கர், தனியார் நிறுவன ஊழியர், லட்சுமிபுரம்: ரயில்வே தண்டவாளம் பகுதி அருகில் உள்ள சாலைகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. இவற்றை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சாக்கடைகளை முறையாக அமைக்க வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் நடவடிக்கை
கந்தசாமி, கவுன்சிலர் (நகராட்சி துணைத் தலைவர், மார்க்சிஸ்ட்): வார்டில் உள்ள ராஜா நகர் பூங்காவில் மேல்நிலைதொட்டி அமைக்கப்பட உள்ளது.