/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி
சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி
சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி
சாக்கடை வசதி இல்லை; பாதியுடன் நிற்கும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் காவேரியம்மாபட்டி ஊராட்சி

வரத்து கால்வாயை சீரமையுங்க
பழனிமுத்து, விவசாயி: பெருமாள்குளத்தில் இருந்து ஒட்டக்குளம், பாப்பான்குளம் வரும் நீர் வழிப் பாதையில் செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும். தண்ணீர் வீணாகாமல் இருக்க கரை பகுதிகளை சிமென்டால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் தென் பகுதியில் செல்லும் ரோடை சீரமைக்க வேண்டும். இங்குள்ள பல தெருக்கள் மண் ரோடுகளாக உள்ளன.
பள்ளங்கள் நிறைந்த ரோடால் சிரமம்
கிருஷ்ணசாமி, விவசாயி காவேரியம்மாபட்டி: புதிய பைபாஸ் ரோட்டில் இருந்து காவேரியம்மாபட்டி செல்லும் பழைய ரோடு சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கப்படவில்லை. கிராம சபை கூட்டங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பக்கத்து ஊராட்சிகளில் சிமென்ட் ரோடு, சாக்கடை வசதிகள் செய்துள்ளனர். ஆனால் இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
கழிவு நீர் கால்வாய் தேவை
மணிவேல், விவசாயி, காவேரியம்மாபட்டி: தெருக்களில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களை உலர வைக்க உலர்களம் அமைப்பதும் அவசியம். பழுதான தெரு விளக்குகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். சேதமான ரோடுகளை சீரமைக்காமல் இருப்பதால் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. அரைகுறையாக நிற்கும் தெரு ரோடுகளை முழுமையாக அமைக்க வேண்டும்.
நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்
பெருமாளம்மாள், ஊராட்சி தலைவி: மற்ற ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும், வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் இந்த ஊராட்சி புறக்கணிக்கப்படுகிறது. 2020--21ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ .85 லட்சம் நிதியை ரத்து செய்து விட்டனர்.