/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வணிக வளாக கடைகள் வாடகை செலுத்த முடியாது மூடல் வணிக வளாக கடைகள் வாடகை செலுத்த முடியாது மூடல்
வணிக வளாக கடைகள் வாடகை செலுத்த முடியாது மூடல்
வணிக வளாக கடைகள் வாடகை செலுத்த முடியாது மூடல்
வணிக வளாக கடைகள் வாடகை செலுத்த முடியாது மூடல்

கூடுதல் விலைக்கு விற்பனை
ஏ.ராஜரத்தினம், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர், குஜிலியம்பாறை : 25 ஆண்டு காலமாக டெண்டர் விடாமல் அரசு மதிப்பீட்டின்படி முறையான வாடகைக்கு வியாபாரிகளுக்கு கொடுத்தனர். இதனால் 28 வணிக வளாக கடைகள் மட்டுமின்றி பாளையத்தில் உள்ள 200 கடைகளிலும் நியாயமான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெண்டர் எடுத்தவர்கள் கூடுதல் தொகைக்கு வாடகைக்கு எடுத்ததால் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கும் நிலை உள்ளது. பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மூடப்பட்ட கடைகளை நியாயமான வாடகைக்கு விட்டு மீண்டும் திறக்க வேண்டும்.
வாடகை செலுத்த முடியாது அவதி
எஸ்.ஆறுமுகம், சமூக ஆர்வலர், பாளையம்: பாளையம் வணிகவளாக கடைகள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் கூடுதல் தொகையுடன் வாடகைக்கு விடப்பட்டு வந்தது. தற்போது ஓபன் டெண்டர் விட்டு வாடகையை உயர்த்தி விட்டனர். இதனால் வாடகைக்கு கடைகளை எடுத்தவர்கள் வாடகையை செலுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் இந்த கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து உள் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நோக்கில் கடைகளை எடுத்துள்ளனர். இதனால் ஏலத்தொகை கூடியது. உண்மையாகவே பிழைக்கும் நோக்கில் கடைகளை எடுத்தவர்கள் வாடகையை செலுத்த முடியாமல் மூடிவிட்டனர். மீண்டும் இந்த
தேவை நிர்ணய வாடகை
நா.பொன்னுச்சாமி, வியாபாரி, பாளையம்: 20 ஆண்டுகளுக்கு மேலாக பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தேன். தற்போது ஓபன் டெண்டர் என வைத்து கூடுதல் வாடகையை ஏற்றி விட்டனர். கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதால் இரண்டு கடைகளை கூடுதல் வாடகைக்கு எடுத்தேன். தற்போது நடத்த முடியாது என தெரிந்ததால் கடைகளை காலி செய்து விட்டேன். அரசு நிர்ணய வாடகைக்கு முறையாக விட்டால் நடத்த தயாராக இருக்கிறோம்.