ADDED : ஜூலை 15, 2024 05:04 AM
வடமதுரை, ; தென்னம்பட்டி சவடம்மன் கோயிலில் மகாசபை கூட்டம் நடந்தது.
அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன், நிர்வாக குழு உறுப்பினர் சவடமுத்து தலைமை வகித்தனர். செயலாளர் தண்டபாணி வரவேற்றார். அறங்காவலர்கள் சவடமுத்து, கணேசன், பொருளாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
கோயில் கும்பாபிஷேகம், மாலை கும்பிடு திருவிழா, சமுதாயக்கூடம் திறப்பு விழா, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.