Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மண் திருட்டு; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மண் திருட்டு; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மண் திருட்டு; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மண் திருட்டு; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : ஜூலை 14, 2024 04:12 AM


Google News
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் அருகே கப்பலப்பட்டியை சேர்ந்த செல்வபிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

இடையகோட்டையில் அப்பாசமுத்திரம் குளம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக லாரிகள் மூலம் செம்மண் அள்ளப்படுகிறது. இதை எனது அலைபேசியில் படம் எடுத்தேன். மண் திருட்டில் ஈடுபடுவோர் மிரட்டல் விடுத்தனர்.

ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தேன். நடவடிக்கை இல்லை.மண் திருட்டிற்கு சில அலுவலர்களும் உடந்தை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும். மண் திருட்டால் ஏற்படும் இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களை பொறுப்பாக்க வேண்டும். அவர்களிடம் இழப்பீடு வசூலிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன், அமர்வு கலெக்டர், கனிமவள உதவி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us