/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
ADDED : ஜூன் 06, 2024 05:39 AM

திண்டுக்கல், : வைகாசி கார்த்திகை யை முன்னிட்டு திண்டுக்கல் முருகன் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருத்திகை நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கார்த்திகை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்கு பூஜை மலைக்கோயிலில் நடைபெற்றது.
தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. கார்த்திகை நட்சத்திர நாளில் அதிகளவில் பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர்.
திரு ஆவினன்குடி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடந்தது. சுவாமி தரிசனம் செய்ய உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.